Saturday 27th of April 2024 02:20:10 PM GMT

LANGUAGE - TAMIL
-
பருத்தித்துறையில் வாள்வெட்டு; ஒருவர் பலி! நால்வர் படுகாயம்!

பருத்தித்துறையில் வாள்வெட்டு; ஒருவர் பலி! நால்வர் படுகாயம்!


யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அல்வாய் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய மு.கௌசிகன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இரண்டு தரப்புக்கு இடையில் ஏற்பட்ட முறுகலே வாள்வெட்டில் முடிந்ததாக தெரியவருகிறது.

படுகாயம் அடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், பருத்தித்துறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE